Monday, December 17, 2007

நெல்லை இளைஞர் அணி மாநாடு: நெடுஞ்சாலையிலிருந்து ஒரு ரிப்போர்ட்.

16 டிசம்பர் 2007.ஞாயிறு. இரவு மணி 10.00.
மதுரை ---- கோவில்பட்டி ---- நெல்லை --- திருவனந்தபுரம்.
இந்த NHல் சரியாக 'கோவில்பட்டி'ன்ற இடத்தில் நிற்கிறோம். நாம ரிப்போட்டர் எல்லாம் இல்லீங்க. பொது ஜனத்தோடு திருவனந்தபுரம் செல்வதற்காக, அந்த நெடுஞ்சாலையின் அப்போதைய பல்ஸ் தெரியாமல் பஸ்ஸுக்காக நிற்கிறோம். அய்யோ! தி.மு.க.வின் நெல்லை இளைஞர் அணி மாநாடு முடிந்து திரும்பும் நேரம்மல்லவா இது. திருவனந்தபுரம் திட்டத்தில் தற்காலிக சறுக்கல்.

விகடனின் ஒத்துழைப்பால் ஒரு அரை மணி நேரம் கடத்தி ஆகிவிட்டது. விசாரித்ததில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மதுரைக்கருகில் நெல்லை நோக்கி செல்ல வேண்டிய பேருந்துகள், நிறுத்தப்பட்டுள்ளது தெரிய வந்தது. 20 காக்கிச்சட்டை காரர்கள் அங்கு உலாவுவதை காண்கிறோம். அதற்குள், சுமார் 200 பேருந்துகள் மதுரை நோக்கி சீறி பாய்ந்து இருந்திருக்குமே என்றும் எண்ணிப்பார்க்கிறோம். ஆக,அந்த நான்கு வழிச் சாலையில், ஒரு வழியில் ஒரு திசையில் மட்டுமே போக்குவரத்து(!) இயங்கிக் கொண்டிருக்கிறது.மனம்,சூழ்நிலைக்கு தாவுகிறது. சுவாரசியமான
சம்பவங்கள் நடந்தேறின.

ஒரு புள்ளியில் நின்று கொண்டு அனைத்து மாவட்ட அரசு பேருந்துகளையும் காண முடிந்தது.தனியார் பேருந்துகள் வாடகைக்கு தர பெரும்பாலும் மறுத்துவிட்டார்களாம். ஆனாலும் கழகத்துகார நிறுவன டவுண் பஸ்களைகூட வடக்கு மாவட்டங்களிருந்தெல்லாம் இவ்வளவு தூரம் ஓட்டியோ,உருட்டியோ கொண்டு வந்திருந்தார்கள்.

இளைஞர் அணி இளசுகளில்(!) 70% தொப்பை உள்ளவர்கள்.ஆர்டர் செய்து ஒன்று போல் அணிந்திருந்த 'டி-சர்ட்'டின் முன்புறம் வரைந்திருந்த வட்ட வடிவ லோகோ தொப்பைகளை நன்றாக எடுத்துக்காட்டியது. வயதும் 40 -45 இருக்கும். (யூத் தாம்மாம்). விசில், 'பெரிய','சின்ன' வாரிசுகள் வாழ்க! கோசங்கள், கண்களில் பசி இவைதான், அங்கு நின்று கொண்டிருந்த ஏதோ ஒரு ஊர் உடன்பிறப்புகளின் நிலை.

ஸ்கார்ப்பியோ, இன்னோவா, குவாலிஸ் அதிகம் கடந்து பறந்து சென்ற வாகனங்கள். சுமோ! சும்மா ஆகி விட்டது போல. ஒரு பொறியியல் கல்லூரியின் மினிபஸ்ஸும் தி.மு.க கொடியுடன் சென்றது. பாதி வாகனங்களில் விடியோ ஓடிக்கொண்டிருந்தது. அதில், பாதி புது படங்களாக இருக்கலாமென்று நினைக்கிறோம். சாட்சியாக, நாம் கவனித்தது , 'மருதமலை'. 'கலைஞரை' மதிக்கும்
திரைஉலக கலைஞர்கள் கவனிக்க வேண்டிய இடம்.

நீங்கள் ஆவலுடன் எதிர் பார்க்கும் ஏதேனும் சர்ச்சை இன்னும் சில வரிகளுக்குப்பின்.

நம் கவனம்,லேப்டாப் ம்ற்றும் பேக்கை சரி பார்த்தபின் நின்ற பொது மக்களின் மேல் விழுகிறது. அட,நம்ம ஊர் பெண்கள் மாறிட்டாங்கப்பா. அதிசயம், கணவர்களை இப்படி நிறுத்தியதற்காக கரிச்சுக் கொட்டாமல் நின்றார்கள். கேட்டால், என்ன செய்ய?இதில் இருந்து கற்று கொள்ள வேண்டியதுதான் என்கிறார்கள்.ஓ! கார்ப்பரேட் வேல்ட். எதையும் 'Learning Experience' அ எடுத்திப்பிங்க!. நல்லதுதான்.

சுவரசியமான சர்ச்சையுடன் அடுத்த பதிவு.

அன்புடன்,
மணி.ஜி

No comments: