Thursday, November 29, 2007

வயசுப்பையன் தனியே இருட்டில்

அலுவலகம் முடிந்து அன்று கொஞ்சம் தாமதமாக கிளம்பினேன்.வெளியே வந்தவுடன் ஒரு எண்ணம், இன்று பேருந்து நிறுத்ததிற்கு புது வழியில் செல்லலாம் என்று.சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் என்று
மனது கணக்கிட்டது.
மணி ஏழு.இந்த நேரம் அந்த வழி செல்லலாமா
? என்ற கேள்வி முளைத்தது. என்னுடைய தோழியர் சிலர் இந்த வழியில் செல்வார்கள் என்று கேள்விப்பட்டதுண்டு. பெண்களுக்கே சரியென்றால், "வயசுப்பையன்" நமக்கு பிரச்சனையில்லை. அதுவும் இன்றி நிறைய அலுவலகம் முடிந்து செல்லும் வாகனங்களை கண்டேன்.கால்கள் நடை போட்டன.
எப்பொழுதும் வண்டி ஏற்றிச் செல்லும் நண்பன் ஊரில் இல்லை. மனக்கண்முன் அவன் முகம் வந்து மறைந்தது. கேரளத் தலைநகரின்
முக்கிய வியாபார ஸ்தலத்திலிருந்து தொடங்கும் அந்தப் பாதை ஒரு முக்கிய சாலையில் போய் சேரும்.பகலில் போனதுண்டு. பேருந்து கடந்து
சென்றது.இரு சக்கர வாகனங்கள் கடந்து சென்றன.
கேரளத்தை வரைபடத்தில் மட்டுமே சமவெளியாக காணலாம். பாதையின் இரு பக்கமும் மேடா
?மலையா? என்று இனங்காண முடியவில்லை.
அதன் தளத்திலே சில வீடுகள்.மனிதர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. மெச்சிக்கொண்டேன்
, தெரு விளக்குகள் இருப்பதைக்கண்டு.
ஒரு 50 மீட்டர் சென்றவுடன்
, இடப்பக்கம் சாலை திரும்பியது.......

ஒரு நீண்ட சாலை கண்ணில்பட்டது என்றுதானே எழுதவேண்டும்? அவ்வாறு எழுத முடியாத அளவு கும்மிருட்டு. ஆங்காங்கே,
பொட்டு பொட்டாக வெளிச்சம். மிக நீண்ட இடைவெளிகளில் தெருவிளக்குகள். கேரளாவின் நிறம் என்னவென்று கேட்டால், அரசியல் சார்ந்தவர்கள் சிவப்பு என்பார்கள், சுற்றுலா சென்றவர்கள் பச்சை என்பார்கள். என்னைக் கேட்டால் இருளின் நிறம் என்பேன்.(கருப்பு நிற கோண்டா ஆக்டிவா அதிகம் காணப்படும் வாகனம்)

எதிரே வந்த வாகனம், வேகத்தடையில் நின்று என்னை பார்த்து இளித்து விட்டு போனதாக உண்ர்ந்தேன். கொஞ்சம் தள்ளி பேருந்துக்கு காத்திருப்பது போல் சிலர்.அவர்கள் அந்த இருட்டை பொருட்டாக மதிக்கவில்லை என்பது தெரிந்தது. அந்த சாலையிலும் கூட பேருந்து வருமா என்ற சந்தேகத்தில் நடக்கலாயினேன்.

இயற்கையிடம் மட்டுமே உணரக்கூடிய இருளும் அமைதியும் கைகோர்த்து என்னை சுற்றி வலம் வந்தது. அச்சமா ஆனந்தமா தெரியவில்லை அவ்வளவு
அற்புதமான மனநிலை. நான் மூச்சை இவ்வளவு சத்தமாகவா விடுவேன்
? என் உடலில் இவ்வளவு குளிர்ச்சியை நான் உணர்ந்ததில்லை. ஆகா! இவ்வளவு,
அவ்வளவு என்ற எல்லையின்மையை அறிய வேண்டும் என்று ஞானிகளின் புத்தகங்களில் படித்ததுண்டு.அறிந்து கொண்டேன். இரு பரபரப்பான நகரப்புள்ளிகளுக்கிடையில் இப்படி ஒரு இடமிருந்தது ஆச்சிரியமூட்டியது. அற்புதங்களையும்,ஆச்சிரியங்களையும் மூச்சுமுட்ட குடித்துக்கொண்டேன்.கேரளா கடவுளின் தேசம் தான்.

அவ்வாறாயின் கடவுள் எங்கே கேட்டது மனது எல்லையின்மையை அறிந்தபின்னும்கூட.கடவுள் கண்முன் தோன்றினார்.

ஆம், ஒரு கிறிஸ்துவ ஆலயத்துடைய சிலுவை மிதமான வெளிச்சத்தில் சிலிர்க்கச்செய்தது. மக்கள் வணங்கி கொண்டிருந்தனர். முக்கியச்சாலை வந்துவிட்டது.

செல்ல வேண்டிய பேருந்தை பார்த்தவுடன்தான் பணத்தை பரிசோதித்தன கைகள்.இயற்கை தந்த பல ஆச்சரியங்களுடன், ஆகா! ஒரு வயசுப்பையன் இருட்டில் இழப்பின்றி வரமுடிகிறதே என்ற உபரி ஆச்சரியத்துடன் மக்களோடு மக்களாக கலந்து பயனமானேன்.

Tuesday, November 27, 2007

'முடியல'த்துவத்தின் முக்கியத்துவம்.

"சொப்பாாா...... முடியல" வடிவேலு சார் தந்த வரப்பிரசாதம்னா நம்புவீங்களா?

என்னன்னு நான் பேசுரத கேளுங்க,அப்புறம் நம்புவீங்க.

சமீப நாட்களா விகடன்ல "'முடியல'த்துவம்"ன்ற தலைப்புல ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவருகிறது.

அதன் தலைப்பு என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது.

வடிவேலு சார் டைப்பிலேயே பேசுவோம்.

மனுச பயக நமக்கு ஆயிரம் பிரச்சனை,ஆயிரம் கவல சார். "தேவையே இல்லாததுக்கு ஏன்டா கவல படுற"னு ஊர் பக்கம் சொல்வாய்ங்க....யந்த் தத்துவப்படி எந்த கவலையுமே தேவயில்லாததுதென் மனுச பய மக்களே!.

ஊருசனமெல்லாம் இப்படி கவலப்படாம, பெரச்சனைய பேச்சு வாக்குல எடுத்துக்க சொல்ற தத்துவந்தாம் வடிவேலு சாரோட 'முடியல'த்துவம்.

இதுக்கெப்பறம் நமக்கு அவர் Style வராதப்பா..இனி நம்ம style.

இந்த தெரபிக்கான Prescription,

லோ டோஸ் போதும்னா...

இம்சை அரசன் பாத்துக்கலாம்

ஹை டோஸ்னா

வின்னர் பாத்துக்கலாம்

இன்னும் கிரி,சில்லுனு ஒரு காதல் னு வேற கம்பெனி மருந்துகளும் இருக்கு. மெடிக்கல்ஸ்ல சொல்ற மாதிரி எல்லாம் ஒன்னுதான் கம்பெனி தான் வேற. ஒரு தடவைக்கு(வேளைக்கு) ரெண்டு தடவை(வேளை) பார்த்துட்டு அவரோட வசனமுறையை நன்றாக உள்வாங்கிங்க.

<<மணி எட்டெ முக்கால்.எட்டரைக்கு Swipe பண்ணணும்.சரினு கள்ளத்தனமா swipe பண்ணிட்டு உள்ள போனா உக்காந்திருக்கு சிங்கம் சீனியர் மேனேஜர். உங்க மேல காட்டுத் தனமா கர்ஜிக்குது.கச்சிதமா காதை ஆஃப் பண்ணிட்டு
வாங்கியச்சு.சீட்டுல போய் உட்கார்ந்திட்டு
, (சிகரெட் பிடிப்பவர்களிடம் படிக்க வேண்டிய ஒரே நல்ல விஷயம்)ஒரு puff யை இழுக்கும் முழு நிதானத்துடன், ஒரு பெரு மூச்சை விடும் கால அளவோடு, மனசிலும், நினைப்பிலும், வடிவேலுவை கொண்டு வந்து அவருக்கான முறையுடன்,

"சொப்ப்பாாாா....முடியல" னு சொல்லிடுங்க... சொல்லிப்பாருங்க>>

அவ்வளவுதான் தெரபி முடிஞ்சது.

உண்மையாகவே, வடிவேலு காமெடி பார்த்து தமிழர்கள் கொஞ்சம் நகைச்சுவை உணர்வு பெற்றிருக்கிறார்கள். என்ன நடந்தாலும்,சட்டென்று ஆத்திரப்படாமல்,"வேண்டாம்.சிங்கத்த சீண்டத"னு அவர மாதிரி இமிடேட் செய்ய எடுத்துக்கொள்ளும் சிறிய அவகாசம், நிலைமையை பிரச்சனையின்றி கையாள்கிறது என்பது என் நம்பிக்கை.இப்படிபட்ட ஒரு இனம் புரியாத சிந்தனை மனதின் ஒரத்தில் இருந்தது. இந்த "concept"க்கு விகடன் "'முடியல'த்தும்" என்று பெயர் கொடுத்தவுடன் அந்த சிந்தனையை இனம் கண்டு கொண்டேன்.

இதனுடைய பக்கவிளைவாக ஆராய்ச்சி செய்யும்படி உள்ளது "Threat of Decreased Productivity" தான்.அந்த அச்சம் தேவையில்லைனு நினைக்கிறேன். காரணம்,இந்த தத்துவப்படி மோசமான நிலைமையில் மனதுக்கு நிதானம் கிடைக்கிறதே தவிர பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விடும் தப்பான மனோபாவம் வளராது.

இன்னும் நேர்த்தியாக சொல்ல வேண்டும் என்றால்,"சகிப்புத்தன்மை"க்கு தேவைபடுகிற 'பிரச்சனையின் உச்சத்தை விட்டு இறங்கிஇயல்பு நிலைக்கு வரும் கலையை வடிவேலு தன்னை அறியாமல் சொல்லிக்கொடுத்து, தமிழர்கள் தங்களை அறியாமல் எடுத்துக் கொண்ட இனிய அபாயம் நடந்து விட்டது. எனவே, இதை ஒரு மனவளக்கலை என்று அறிந்து செய்தோமானால் "'முடியல'த்துவம்" கால முக்கியத்துவம் வாய்ந்த "'மரு'த்துவ" தத்துவமாக மாறலாம்.

படிச்சுட்டு சொப்பாாாா.. முடியல னு பயங்கரம சத்தம் கேட்குதே...

எஸ்கேப் ஆயிருடா கைபிள்ள!!

அன்புடன்,
மணி.ஜ

Saturday, November 10, 2007

ட்ரை பண்ணுகிறேன்

இது என் டெஸ்ட் டிரைவ்.