Wednesday, December 19, 2007

நெல்லை இளைஞர் அணி மாநாடு:

தினத்தந்தி பாணியில் பத்தி பத்தியாக எழுத நேர்ந்ததில் வருத்தம்.

மணி 11.00 ஐ நெருங்கியிருக்கும். நின்றிருந்த காக்கிச்சட்டைகளுள் மூவர் சாலையை மறித்து போய்கொண்டிருந்த ஒரு பேருந்தை பேருந்து நிலையத்திற்குள் போகச் சொல்ல, சர்ச்சை இனிதே தொடங்கியது. தங்கள் தோழனை அடித்து விட்ட,பக்கத்து ஏரியா ஆட்களை தாக்கப் போவது போல் வண்டியில் இருந்து குதித்தனர். அந்த இரு காக்கிச்சட்டைக்லும் சூழப்பட்டனர். உடன்பிறப்புகள் உதார் விட,காக்கிச்சட்டையினர் கண்ணியம் காத்தனர். ஆனாலும், மற்ற காவலர்கள் அனைத்து வண்டிகளையும் உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தனர். அனைத்து தொண்டர்களும் தொடை தட்டி இறங்கி ரோட்டொரம் வந்தனர். நிலைமையின் பல்ஸ் எகிற ஆரம்பித்தது.

காரணம், முதல்வரோ,வாரிசுகளோ கடக்க இருப்பதால் இத்தனை கெடுபிடி. 50 வாகனங்கள் மடக்கப்பட்டுவிட்டன. எஸ்காட் வண்டிகள் வெள்ளோட்டம் விட்ட படி பறந்தன. காவலர்களோ "நாங்கள் ஒரு சல்யூட் மட்டும் வச்சி இங்கிருந்து கடத்தியாச்சுன உங்கள விட்ருவோம் கொஞ்சம் கீழ இறங்கி நில்லுங்கனு" கெஞ்சிக்கொண்டிருந்தனர். வண்டியை ஸ்டார்ட் செய்து, உறுமிக்கொண்டிருந்தனர் இளைஞர் அணியினர்.காவலர்கள் முன்னாடி நின்று தடுக்க வேண்டிருந்தது.

"தலைவர்கள் க்ராஸ் பண்ற வரைக்கும் பொறுக்க மாட்டாய்ங்களோ?"கொஞ்சம் விவரமான கட்சிகாரர்களே தலையில் அடித்துக்கொண்டனர். ஆனால் யார் வருகிறார்? என்று பல ஊகங்கள் உலாவின.கலைஞரா மட்டும் இருக்காது,அவரால வேன்ல போகமுடியாது என்பதுதான் ஒருமுக கருத்து. இன்னும் சில suv(ஸ்கார்ப்பியோ,குவாலிஸ்,இன்னோவா) க்கள் பறந்து கடக்க, ஒரு ஹரி படம் பார்த்த மாதிரி இருந்தது. அத்தனை வேகம்,அத்தனை எண்ணிக்கை. ஆகா, நள்ளிரவில் சூரியனேவா? ஆமாம் மக்கள் கருத்தை முறியடித்து கலைஞரே வந்து கொண்டிருந்தார்.

"மாண்புமிகு டாக்டர் கலைஞர்" -வாழ்க! கோஷ்டி கோஷம் போட்டது. மக்கள் கூட்டம் மலைத்து நின்றது.காக்கிச்சட்டைகள் சல்யூட் வைத்தன. சாணக்கியம் சைகை காண்பித்தது. பளிச்சென்றிருந்த சூரியன், சைகைக் கதிர் பரப்பிக்கொண்டே தெற்கே தோன்றி வடக்கே மறைந்தது.கோஷ்டி கிளம்ப ஆயத்தமானது.போட்ட கோஷம் என்ன தெரியுமா?

"போலிஸ் அராஜகம் " - "ஒழிக!". கலைஞர் கையில் இருக்கும் துறை, சாமிகளா அது. நிஜமாவே, உங்க அரசியல் லாஜிக் புரியல "சாமியோவ்"!. இந்த அலுவலகம் செல்லும் பெண்களை பார்த்ததுண்டா? வேலை முடிந்து லேட்டாப்போனா, கிளம்பும் போது தனியே தள்ளிப் போய் அப்பா,அண்ணன்,கணவன், இதில் ஏதேனும் ஒரு மார்களுக்கு போன் செய்வதுண்டு பாதுகாப்பிற்காக. 'வைஜேந்தி'காக்கிச்சட்டை ஒன்று அதெபோல் , தனியே வந்து மொபைலிக் கொண்டிருந்தது. அட, நீங்ககூடவா?

ஒரு முக்கால் மணி நேரம் கழித்து பேருந்துகள் வர, கலைஞரை கண்ட மகிழ்ச்சியில், பொது மக்களுள் ஒருவாரகிய நாம் பேருந்து ஏறி கரை சேர்ந்தோம்.

அன்புடன்,
மணி.ஜி

No comments: