கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
சிறு வயது முதல் அனைத்து கிறிஸ்துமஸ்களுக்கும், விடுமுறையை மட்டுமே கொண்டாடியிருக்கிறேன். இந்த வருடம் அலுவலக நண்பர்கள் மூலம் உண்மையான பண்டிகையை கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தது. சந்தோஷத்தில் புல்லரிக்க வைக்கிறார்கள். அத்தனையும் உற்சாகம் நிரம்பி வழியும் கொண்டாட்டங்கள். நிறைய 'டெக்கரேசன்' பொருட்களை இப்ப தான் பார்க்கிறேன்,பார்த்ததிருந்த சிலவற்றிக்கு பெயர்கள் தெரிய வந்தது.அலுவலகம் முழுவதுக்கும், அலங்காரம் செய்யும் போட்டி நடத்தினோம். அசத்திவிட்டார்கள்.
கிறிஸ்துமஸ் தாத்தா ! இவர் என்னுடைய சந்தேக கேஸ்ஸில் பல நாட்களாக இருப்பவர். இவர் போய் அனைவருக்கும் பரிசு கொடுப்பார், இரவில் தூங்கி காலையில் எழுந்தால் வெளியே வைத்திருந்த கிறிஸ்துமஸ் மரத்தில் பரிசுப்பொருட்கள் வைத்துச் செல்வார் என்று கதைகள் சொல்வார்கள். என்னுடைய சந்தேகம் எல்லாம் ஊரில் உள்ள அத்தனை மரத்திற்கும் எப்படி வைப்பார் அவ்வளவு பணம் யார் ஸ்பான்ஸர் செய்வார்கள் என்பதுதான். என்ன, செய்கிறார்கள் என்றால், சில நாட்கள் முன்னமே எல்லோரிடமும் பரிசுகள் சேகரித்துவிடுகிறார்கள். பின்னர், ஒருவருக்கு தாத்தா வேடம் போட்டு, பரிசுகள் கொடுத்த எல்லோருக்கும் வேறயாரோ அளித்த பரிசை கொடுக்க செய்கிறார்கள்.
நமக்கு என்ன பரிசு வருமோ என்ற எதிர்பார்ப்பும், கிறிஸ்துமஸ் தாத்தா கையில் வாங்கும் பெருமையும் அந்த 'கிறிஸ்துமஸ் கரோல்' எனப்படும் உற்சவத்தை
உற்சாகம் ஆக்குகிறது.
அலுவலகம் முழுவதும் தாத்தாவை முன்ன விட்டு, பின்னாடி பாட்டு பாடி கொண்டே சென்றது நல்ல அனுபவம் தான். "ஹூரே, ஹூரே, இட்ஸ் ஏ ஹோலி ஹாலிடே" பாட்டு எனக்குப் பிடித்திருந்தது. ஒரு வழியாக ஆர்பாட்டம் முடிந்து வந்து அமர்ந்தால், "இந்த நான் பொரடக்ட்டிவ் அவர்ஸ்க்கு" டைம் எவ்வளவு போட என்று சந்தேகம். ஆனால் , சாண்டா க்ளாஸ்ஸை என் சந்தேக கேஸ்ஸில் இருந்து எடுத்து விட்டேன். மெர்ரி எக்ஸ்-மஸ்.
அன்புடன்,
மணி.ஜி
Saturday, December 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment