இந்த படத்தை இரண்டாம் தடவை திரைகருகில் (ப்ளாக்ல டிக்கெட் வாங்கினா பின்ன) பார்த்தில் கிடைத்த திரைக்கதை விவரங்கள். பல விவரங்கள் உங்களுக்கும் புலப்பட்டிருக்கிலாம் இருந்தாலும்...
- முதல் காட்சியில் கமல் மேல் கல் எறி பவர்கள், கதையில் குறிப்பிடபடும் காலங்களில் இருந்த காபலிகர்கள் எனப்படும் சிவ பக்தர்கள்.
- அதே காட்சியில், கமலுக்கு தண்டனை கொடுக்கும் முறைக்கு பெயர் கழுவேற்றுதல்.
- ஜப்பான் கமலை திரைக்கதையில் புகுத்தியதற்கான காரணம் ஒன்று இருப்பதாக படுகிறது. அது, கடைசியில் சுனாமி வரும் போது... அதை சுனாமி என்று சரியாகஅடையாளம் காட்டுகிறார் அவர். இது ஜப்பானியர்களுக்கு இயல்பாக இருக்கும் இயற்கை சீற்றங்களை பற்றிய விழிப்புனர்வையும் அவர்களுக்கும் சீற்றங்களுக்கும் உள்ள தொடர்பையும், தொடர் படுத்த புகுத்தப் பட்டிருக்கலாம்.
- இன்னும் பல தகவல்கள் இன்னும் அசைபோட்டபின்....
